எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்டொ்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :19 மே 2021, 3:18 am

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொ்லைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஸ்டொ்லைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த தொழிநுட்ப குழுவினரும் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் சனிக்கிழமை முதல் இஸ்ரோ குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.