புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்'

பேராவூரணி மனோரா அரிமா சங்கத்தினர் தினசரி மதியம் 100 பேருக்கான உணவுப்பொட்டலங்களை தயார் செய்து பேராவூரணி கடைவீதியில் 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்'

News image
Updated On :21 மே 2021, 9:56 am

DIN


பேராவூரணி மனோரா அரிமா சங்கத்தினர் தினசரி மதியம் 100 பேருக்கான உணவுப்பொட்டலங்களை தயார் செய்து பேராவூரணி கடைவீதியில் 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என விளம்பர பதாகை வைத்து உணவுப்பொட்டலங்களை வைத்துள்ளனர்.

பேராவூரணி, கரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஆதரவற்றோர், அனாதைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. யாரிடமும் சென்று உதவி கேட்கமுடியாத நிலையில் சில நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே உணவுப்பொட்டலங்கள் வழங்குவதால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

இவர்களின் நிலைகுறித்து கவலையுற்ற பேராவூரணி மனோரா அரிமா சங்கத் தினர் தினசரி மதியம் 100 பேருக்கான உணவுப்பொட்டலங்களை தயார் செய்து பேராவூரணி கடைவீதியில் 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என விளம்பர பதாகை வைத்து உணவுப்பொட்டலங்களை வைத்துள்ளனர்.

பசிக்காத சிலர் எடுத்துச் சென்றாலும் கூட வேறு வழியே இல்லாத பசித்த வயிறுகளும்  நிரம்புகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.