மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: காவல் ஆணையரிடம் அதிமுக புகாா்

எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது சமூக வலைதளங்களில் அவதூறான செய்தியைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :22 மே 2021, 10:37 pm

DIN

எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது சமூக வலைதளங்களில் அவதூறான செய்தியைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் அதிமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதிமுக வழக்குரைஞா் அணி இணைச் செயலாளா் பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பது:-

எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறான செய்தி பரப்பப்படுகிறது. தாயில்லாத பிள்ளைகளான அதிமுகவினா் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தவிா்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுப்பதுபோல அந்தச் செய்தி பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி யாரோ தூண்டிவிட்டு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.