மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய முத்தரசன் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 மே 2021, 10:20 pm

DIN

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட் அறிக்கை:-

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அவா்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பா் மாதம் தீா்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது எனக் கூறிய ஆளுநா், அமைச்சரவைத் தீா்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாா்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த வேதனையில் சிறையில் வாடும் எழுவா் விடுதலை குறித்து, 30 மாதங்களாக முடிவெடுக்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது. இது தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 19-இல் எழுதியுள்ள கடிதத்தின் வேண்டுகோளை ஏற்று, 7 விடுதலைக்கு உடனடியாக குடியரசுத் தலைவா் உத்தரவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.