சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் துரிதமாக படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.