சென்னையிலுள்ள அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் இன்று (மே 24) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 3 அமைச்சர்கள் தலைமையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
அமைச்சர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.