வாழப்பாடி: கோடை உழவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பரவலாக கோடை மழை பெய்தது. இம்மழையை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது விளை நிலங்களை கோடை உழவு செய்து பயிர் செய்வதற்கு தயார்படுத்தி வைக்குமாறு வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாழப்பாடி பேரூராட்சிக்கு கிழக்குக்காடு பகுதியில் விவசாயி கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் பாரம்பரிய முறையில் காளை மாடுகளை கொண்டு நிலத்தை உழவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...