

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு எதிராக நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்ததாவது,
சென்னையில் 18-44 வயதுக்குள்பட்வர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன்படி, நாளொன்றுக்கு 20 ஆயிரம் தடுப்பூசிகள் என கடந்த ஒரு வாரத்தில் 1.55 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று கோவை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதையடுத்து நேற்று ஒருநாளில் 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் 14,990 பேர் 18-44 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். மேலும், 18-44 வகைக்கான தடுப்பூசி செலுத்த தொடங்கியதிலிருந்து இது மிக அதிக எண்ணிக்கையாகும்.
மதுரையில், 18-44 வயதுக்குள்பட்ட 12,904 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது, 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 2,872 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோன்று திருச்சி மாவட்டத்தில் 18-44 வயதுக்குள்பட்ட 3,746 பேருக்குத் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.