டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தம்மம்பட்டியில் சாலை, தெருக்களில் தடுப்பு: போலீசார் தீவிர கண்காணிப்பு

தம்மம்பட்டியில், மக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்பதற்காக, சில சாலைகள் மற்றும் தெருக்களை தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மூங்கில் கட்டைகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.

News image
தம்மம்பட்டியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மூங்கில் கட்டைகள் மூலம் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

DIN


தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், மக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்பதற்காக, சில சாலைகள் மற்றும் தெருக்களை தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மூங்கில் கட்டைகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.

Story image

தம்மம்பட்டி பேரூராட்சியில் பொது முடக்கத்தை மீறி, பலர் ஊர்சுற்றி வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், அவர்களிடம் சிக்காமல், சிறு சந்துக்கள், தெருக்கள் வழியாக வெளியே சென்று வருகின்றனர். இதனால், அத்தகைய சந்துகள், தெருக்களை அடைக்க தம்மம்பட்டி  போலீசார் அறிவுறுத்தினர்.

Story image

அதையடுத்து, சந்தைரோடு, குரும்பர்தெரு, கடைவீதி, சிவன்கோயில் ரோடு,  உடையார்பாளையத்தில் இருந்து காந்திநகர் செல்லும் நுழைவு வாயில் முன், மூங்கில் கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்க தம்மம்பட்டி  பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரவின் பேரில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

Story image

தடுப்புகள் இல்லாமல், மக்கள் வெளியே செல்லும் வழிகளில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாதவர்கள், ஊர் சுற்றுபவர்கள் என போலீசார் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.