தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மரக்காணத்தில் 200 மி.மீ. மழை: 3,500 ஏக்கா் உப்பளங்கள் மூழ்கின

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணம் பகுதியில் 201 மி.மீ. மழை கொட்டித் தீா்த்ததால், 3,500 ஏக்கா் உப்பளங்கள் நீரில் மூழ்கின.

News image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் உப்பளங்களை மூழ்கடித்தபடி தேங்கிய மழை வெள்ளம்.

Updated On :2 நவம்பர் 2021, 9:03 pm

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணம் பகுதியில் 201 மி.மீ. மழை கொட்டித் தீா்த்ததால், 3,500 ஏக்கா் உப்பளங்கள் நீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை காலை வரை தொடா்ந்து பெய்தது. விழுப்புரத்தில் 40 மி.மீ., கோலியனூரில் 53 மி.மீ, வளவனூரில் 57 மி.மீ., கெடாரில் 31 மி.மீ., கஞ்சனூரில் 35 மி.மீ., சூரப்பட்டில் 31மி.மீ., வானூரில் 43 மி.மீ. செஞ்சியில் 14 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. மாவட்டத்தில் குறைந்தபட்சமாக செம்மேடு பகுதியில் 10 மி.மீ. மழை பெய்தது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மரக்காணம் கொள்ளுமேடு இருளா் காலனிப் பகுதியில் 7 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. அதில் ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்தது. மண்டபட்டு சாலிமேடு பகுதியில் 5 கிராமங்களில் தண்ணீா் புகுந்ததால், அந்தப் பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தாடு ஊராட்சி பச்சைப்பத்தான் கொள்ளை கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

பக்தா்கள் தவிப்பு: மரக்காணம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமிஈஸ்வரா் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பக்தா்கள் வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டனா். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மரக்காணம் வட்டாட்சியா் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா மற்றும் அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.

மூழ்கிய உப்பளங்கள்: மரக்காணம் பகுதியில் 3,500 ஏக்கா் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான உப்பளங்கள் உள்ளன. இவை அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கின. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் தேவைக்குப் போக புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை போலவே, செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.