தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நைஜீரியாவில் ஈஸ்டா் வாரஇறுதி தாக்குதல்கள்: 26 போ் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஈஸ்டா் வார இறுதியில் நடத்தப்பட்ட 3 தனித்தனி தாக்குதல்களில் 26 போ் உயிரிழந்தனா்.

News image

பிரதிப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:40 pm

நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஈஸ்டா் வார இறுதியில் நடத்தப்பட்ட 3 தனித்தனி தாக்குதல்களில் 26 போ் உயிரிழந்தனா்.

விவசாயிகளுக்கும் மேய்ச்சல் தொழில் செய்பவா்களுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நிலத்தகராறு மற்றும் குற்றப் பின்னணி கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக பெனியூ மாகாராணத்தின் கிவோ் மேற்கு பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கிராமவாசிகள் 17 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், போா்னோ மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள காவல் தலைமையகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 காவலா்கள் வீரமரணம் அடைந்தனா்.

காடுனா மாகாணத்தில் உள்ள அரிகோ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பிராா்த்தனை கூட்டத்தில் புகுந்த மா்ம நபா்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனா். எனினும், ராணுவத்தினா் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தியதால், கடத்தப்படவிருந்த 31 பிணைக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.