சக்திமசாலா நிறுவனங்கள், நடுநகர் அரிமா சங்கம் சார்பில் 136 பேருக்கு தீபாவளி புத்தாடை
சக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏழை, எளியோர் 136 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனங்கள்,ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழாவில் சக்தி மசாலா நிறுவன தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் சாந்திதுரைசாமி பயனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினர்.









