கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் மெட்டு சாலையில் நடைபெற்றது.
இதையும் படிக்க | காவல்துறையும் கையூட்டு கலாசாரமும்!
தேனி மாவட்டம், கம்பத்தில் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கம்பம்மெட்டு மலைச்சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர். என். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதையும் படிக்க | பருவநிலை மாற்றம்: எந்த நாடும் தப்ப முடியாது - பிரதமர் மோடி
பந்தயத்தில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் ஜோடி, தேன்சிட்டு, பூஞ்சிட்டு என ஐந்து வகை மாடுகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கம்பம் காமுகுல ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் செய்தனர்.
வெற்றிபெற்ற மாடுகளுக்கு மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.