டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உளுந்தூர்பேட்டை சந்தையில் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் கொட்டும் மழையிலும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:30 am

DIN

உளுந்தூர்பேட்டை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் கொட்டும் மழையிலும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

உளுந்துர்பேட்டை பகுதியில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பு உள்ளது. இங்கு வாரம்தோறும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சந்தை, காலை 7 மணியில் இருந்து நடைபெற்றது. இந்த சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமல்லாது மங்கலம்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். நாளை வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சந்தை நடைபெற்றது.

சந்தை தொடங்கி நடைபெற்ற 2 மணி நேரத்தில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தொடா் மழை காரணமாக ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்தது. தீபாவளியை முன்னிட்டு ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.