நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைத்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
பாஷ்சந்திரபோஸ்
பாஷ்சந்திரபோஸ்
Published on
Updated on
1 min read

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைத்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள வடகுமரை ஊராட்சியை சேர்ந்த கணேசன் மகன் சுபாஷ்சந்திரபோஸ்(20), இவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மணமுடைந்த மாணவர் கடந்த 2 ஆம் தேதி காலை களைக்கொல்லி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த பெற்றோர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். 

இது குறித்து தகவலறிந்த தலைவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இச்சம்பவம் வடகுமரை ஊராட்சியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com