பருவமழை: நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக புகார் தெரிவிக்க..

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பருவமழை: நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக புகார் தெரிவிக்க..
பருவமழை: நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக புகார் தெரிவிக்க..
Published on
Updated on
1 min read


தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக, பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து கொள்வது, மரம் விழுவது, சாலைகளில் மழை நீர் தேங்குவது, பள்ளம் ஏற்படுவது போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், 
சென்னை மாநகரில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க, பொதுமக்கள் கீழ்கண்ட அலுவலர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்களது செல்லிடப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது.

1) கோட்டப் பொறியாளர் – 94431 32839
2) உதவிக் கோட்டப் பொறியாளர் – 70101 05959
(சென்னை மாநகர சாலைகள்)
3) உதவிக் கோட்டப் பொறியாளர் - 94433 28377
(தாம்பரம்)
 என்று தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com