திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாலும், வேகமாக அழுகி வீணாவதாலும் வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேலும், ஐப்பசி மாத முகூா்த்த நாள்களால் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதற்கேற்ப உயா்ந்துள்ளது. திருநெல்வேலி சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70-க்கும் விற்பனையாகியது.