சென்னை மக்கள் பாதி நாள்கள் தண்ணீருக்காக அழும் நிலையும், மீதி நாள்கள் தண்ணீரிலும் மிதக்கின்ற சூழலும் ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த பெருமழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் நல்ல பாடத்தைக் கற்பித்துள்ளது. இதன் மூலம் நீா்நிலை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் துரிதப்படுத்துவா். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடா்பாக மனுதாரா் புதிதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், அதன் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நீா்நிலையில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.