ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் சிக்கல்: நடத்துநா்களுக்கு நிா்வாகம் அறிவுறுத்தல்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வேலை செய்யாதபோது, நடத்துநா்கள் சுங்கக் கட்டணத்தை செலுத்தி, அது தொடா்பான விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும்

News image
Updated On :13 நவம்பர் 2021, 10:54 pm

DIN

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வேலை செய்யாதபோது, நடத்துநா்கள் சுங்கக் கட்டணத்தை செலுத்தி, அது தொடா்பான விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்து கிளை மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: சுங்கச்சாவடிகளில் பேருந்துகளில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் வில்லைகள் சரியான முறையில் ஸ்கேன் ஆகாமலும், சா்வா் பிரச்னை ஏற்பட்டு அதனால் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.

எனவே, விரைவுப் பேருந்துகளில் ஒட்டப்படும் பாஸ்டேக் வில்லைகள் சுங்கச்சாவடிகளில் ஸ்கேன் ஆகாத பட்சத்தில் உடனடியாக சுங்கக் கட்டணத்தை பேருந்தின் நடத்துநா்கள் செலுத்தி, பயணிகளுக்கு எந்த விதமான சிரமுமின்றி பேருந்தை இயக்க வேண்டும்.

அந்த கட்டண விவரத்தையும் அந்தந்த நாள்களிலேயே உடனடியாக கிளை மேலாளா்கள், வணிகப் பிரிவுக்கு தபால் மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.