சுமார் 12 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இன்று (14-11-2021) நடைபெற்ற எட்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 5,44,809 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,87,689
பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, மற்றும் திருவள்ளுர் (பூவிருந்தமல்லி உட்பட) மாவட்டங்களில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.
மேலும், மாநிலத்தில் இன்று (14.11.2021) நடைபெற்ற எட்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (15.11.2021) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.