அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுரையில் பாமக நிர்வாகி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; ஒருவர் காயம் 

மதுரை  மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். வழக்கறிஞரான இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 

News image
மதுரையில் பாமக நிர்வாகி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; ஒருவர் காயம்
Updated On :16 நவம்பர் 2021, 8:48 am

DIN


மதுரை: மதுரை  மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். வழக்கறிஞரான இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில் செவ்வாய் கிழமை காலை மாரிச்செல்வம் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவரைத் தேடி வீட்டுக்கு வந்த 2 நபர்கள், வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்ததில்  பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு  காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீட்டின் உரிமையாளர் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர காவல் தெற்கு துணை ஆணையர் தங்கதுரை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு  விசாரணை மேற்கொண்டார். 

Story image

மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். பட்டப்பகலில் பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.