கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கோவை பள்ளி மாணவி தற்கொலை: குழந்தைகள் நல ஆணையம் விசாரணை

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:35 am

DIN

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

மேலும், ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் அமர்வு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாணவியின் பெற்றோர், நண்பர்கள், பள்ளி நிர்வாகம், போலீஸார் உள்பட 13 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இதுதொடர்பாக மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவி தற்கொலை விவகாரத்தில் 13 சாட்சிகளிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.