சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read


புது தில்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி இரு தினங்களுக்கு முன் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக   நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதி பணிகளை தற்காலிகமாக நீதிபதி எம்.துரைசாமி கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com