விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளநீர்; பக்தர்கள் அவதி

திருச்செந்தூரில் வியாழக்கிழமை காலை பெய்த பலத்த மழையினால் குடியிருப்புகள் மற்றும் முருகன் கோயிலைச் சுற்றி மழை நீர் சூழ்ந்தது.

News image
திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளநீர்
Updated On :25 நவம்பர் 2021, 9:56 am

DIN

திருச்செந்தூரில் வியாழக்கிழமை காலை பெய்த பலத்த மழையினால் குடியிருப்புகள் மற்றும் முருகன் கோயிலைச் சுற்றி மழை நீர் சூழ்ந்தது. நகரே வெள்ளக்காடானதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர்.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், நகரெங்கும் மழை நீர் சூழ்ந்தது.  சுமார் 3 மணி நேரத்தில் 17 செ.மீ. மழை பதிவானதால் தெருவெங்கும் வெள்ளக்காடாய் இருந்தது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிரிப்பிரகாரம்,, சண்முக விலாசம் பகுதியில் இருந்து மழைநீர் திருக்கோயில் உள்ளேயே வழிந்து ஓடியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.