மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரத்து அதிகரிப்பால் ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது; ரூ.50-80 க்கு விற்பனை

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:51 am

DIN

ஈரோடு: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை அதிகரித்துள்ளன.

குறிப்பாக தக்காளி விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்ற தக்காளி பின்னர் ஜெட் வேகத்தில் வேகமாக உயர்ந்து ஒரு கிலோ சில்லரை விற்பனையில் ரூ.140 வரை விற்பனையானது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவில்  செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடிகளிலிருந்து தக்காளியில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது.

கடந்த சில நாட்களாக 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,500 வரை விற்பனையானது. 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1200 - வரை விற்பனையானது.

இந்நிலையில் இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை 2000 முதல் 3000 வரை பெட்டிகள் வரை வரதாகியிருந்த நிலையில் இன்று 7000 தக்காளி பெட்டிகள் வரத்தாகின.

இதன் காரணமாக இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது. 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.1000 முதல் 1050 வரையும், 14 கிலோ பெட்டி ரூ.650 முதல் 700 வரையும் விற்பனையானது. சில்லரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. கிட்டத்தட்ட கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.