திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் குமரன் சிலை முன்பாக பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து இதில், கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மட்டும் அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்தது.
இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பின்னலாடை, விசைத்தறி, ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களின் நிலை கருதி, மத்திய, மாநில அரசுகள் நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்த அரசு குழு அமைக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதி பனியன் வியாபாரி சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், நிர்வாகிகள் மகேந்திரன் ரவி, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
மாா்ச் 12-இல் தவெக ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

