புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரி கடத்தல்: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது

ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரியை கடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

News image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திக்கு கடத்திச் சென்ற முந்திரி பாரம் ஏற்றிய லாரி

Updated On :27 நவம்பர் 2021, 5:22 am

DIN

ராசிபுரம்: ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரியை கடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான 8 டன் எடை கொண்ட முந்திரி பாரம் ஏற்றிய லாரியை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திக்கு கடத்திச் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பலை, நாமக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன் தூத்துக்குடி மாவட்ட போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த கடத்தலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை 7 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். லாரியை பறிமுதல் செய்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.