தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு

சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

News image
கால பைரவருக்கு நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
Updated On :27 நவம்பர் 2021, 9:53 am

DIN

சீர்காழி: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு 7-ம் நூற்றாண்டில்  திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஸ்தலமாகும்.

இங்கு காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

முன்னதாக சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹுதி செய்விக்கப்பட்டு , தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அஷ்ட பைரவர்கள் சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.