ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஓசூரில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கைது

ஓசூரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் லஞ்சஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :30 நவம்பர் 2021, 10:11 pm IST

ஓசூரில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஓசூர் நேரு நகரில் வசித்து வருபவர் சி.என்.ஷோபனா. இவர் ஒரு வேலூர் மண்டல பொதுப்பணித் துறை செயற்பொறியாளராக (தொழில்நுட்ப கல்வி, வேலூர் மண்டல செயற்பொறியாளர்) பணியாற்றி வருகிறார்.

இவரிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக 1 ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒதூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 3-ஆம் தேதி சோதனை செய்தபோது அவரது வீட்டிலிருந்து ரூபாய் 2 கோடியே 27 லட்சம் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒரு லாக்கர் சாவி 7 சொத்து ஆவணங்கள் 38 சவரன் நகை ஒரு 1.3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்தனர். செயற்பொறியாளர் ஷோபனா தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் கட்டடங்கள் அனுமதி அளிப்பது தொடர்பாக இவர் லஞ்சம் பெற்றுள்ளார்.   இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவு  ஆய்வாளர் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.