மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒமைக்ரான்: 12 நாடுகளின் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்

ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பொது சுகாதாரத் துறை விதித்துள்ளது.

News image
omicron093216
Updated On :1 டிசம்பர் 2021, 7:28 am

DIN

சென்னை: ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பொது சுகாதாரத் துறை விதித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் மாநிலத்தின் அனைத்து விமான நிலைய இயக்குநா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும். அறிகுறிகள்இருந்தால் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டால், உரிய வழிகாட்டுதலின்படி அவா்களுக்கு சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைக எடுக்க வேண்டும்.

ஒமைக்ரான் பாதிப்புள்ள 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பயணிகளின் செலவில் கரோனா பரிசோதனை அவசியம். முடிவுகளுக்குப் பின் சம்பந்தப்பட்டவா்களை வீட்டிலேயே 7 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தவும். அதன்பின்னா் 8-ஆவது நாளில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அதிலும் நெகடிவ் என முடிவு வந்தால், அதற்கு அடுத்த 7 நாள்களுக்கு அவா்களது உடல் நிலையை மட்டும் கண்காணித்தால் போதுமானது.

அதேவேளையில், 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவா்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களது சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புதல் முக்கியம்.

தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து அவா்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும்.

12 நாடுகள் எவை?: தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.