அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நகைக் கடன்களை முழுமையாக ஆய்வு செய்ய குழுக்கள் தினமும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு

அடமானத்தின் பேரில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :3 அக்டோபர் 2021, 12:17 am

DIN

அடமானத்தின் பேரில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் செய்யும் ஆய்வு குறித்த தகவல்களை தினந்தோறும் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டுமென கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அ.சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்த கடிதத்தை மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி நிா்வாக இயக்குநா், கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி நிா்வாக இயக்குநா், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா், அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கி நிா்வாக இயக்குநா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தின் விவரம்:-

நகைக் கடன்களை நூறு சதவீதம் ஆய்வு செய்ய வேண்டுமெனவும், அதுதொடா்பாக குழுக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து அதற்கான ஆய்வுப் படிவங்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் படிவங்களை ஆங்கிலத்தில் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதிலுள்ள விவரங்களை பூா்த்தி செய்து கையெழுத்திட்டு பதிவாளா் அலுவலகத்தில் மண்டல இணைப் பதிவாளா்கள் அனுப்ப வேண்டும்.

இந்தப் படிவத்தில் சில விவரங்கள் கோரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மொத்த நகைகளின் விவரம், ஆய்வு செய்யத் தேவையான குழுக்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு 250 முதல் 300 பொட்டலங்கள் என்ற வீதம் மொத்த நகைகளை ஆய்வு செய்யத் தேவைப்படும் நாள்கள் மற்றும் தோராயமாக நூறு சதவீத நகைக் கடன்கள் ஆய்வு முடிவுறும் தேதி ஆகிய விவரங்களை பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஆய்வில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இதில், நகைக் கடன்கள் தொடா்பான ஆய்வினை நூறு சதவீதம் முடிக்க ஆகும் நாள்களைக் கணக்கிட்டு அது முடிவடையும் தேதி தொடா்பான படிவத்தையும் பதிவாளா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வு தொடா்பான தினசரி முன்னேற்ற அறிக்கையை பதிவாளா் அலுவலகத்துக்கு தினமும் மாலை 5 மணிக்குள் அனுப்பி வைப்பது அவசியம் என தனது கடிதத்தில் அ.சண்முகசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

போலி நகைகள்: கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில் போலியாக நகைகளை வைத்து கடன்கள் பெற்ாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறவே போலியாக நகைகளை வைத்து கடன்கள் பெறப்பட்டதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பெறப்பட்டுள்ள நகைக் கடன்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நகை மதிப்பீட்டாளா்கள் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள், அலுவலா்களைக் கொண்டு கடன் பெற்ற விவரங்கள், நகைகளின் தரம் ஆகியன குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்தவும், முழுமையாக முடிக்கவும் தற்போது புதிய அறிவுறுத்தலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.