47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரான் சிறையிலிருந்து 19 மாதங்களுக்குப் பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள்

ஈரானில் 19 மாதங்கள் சிறைவைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் வீடு திரும்பினர்.

News image
ஈரான் சிறையிலிருந்து 19 மாதங்களுக்குப் பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள்
Updated On :5 அக்டோபர் 2021, 6:25 am

DIN

ஈரானில் 19 மாதங்கள் சிறைவைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் வீடு திரும்பினர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேர் கடந்த வருடம் குவைத் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி குழுமம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர்.

மீன்பிடிப்பதற்காக குவைத் நாட்டின் ஃப்ஹாகில் பகுதியில் இருந்து கிளம்பியவர்களை ஈரான் கப்பல் படையினர் எல்லை தாண்டி வந்ததற்காக கைது செய்தனர்.

பின் கடந்த 19 மாதங்களாக அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான மீனவர்கள் ஆல்பர்ட் ரவி , ஆரோக்கிய லிஜின் , தினாஸ் , காட்வின் ஜான் வெல்டன் , ஜோசப் பெஸ்கி , ஜேசுதாஸ் , சகாய விஜய் , மைக்கல் அதிமை மற்றும் வெலிங்டன் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவரின் சகோதரி ,’ குடும்ப நிலையை உயர்த்த குவைத் சென்றவர்களை ஈரான் அரசு கைது செய்து 19 மாதங்களாக சிறையில் வைத்திருந்தது. அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு நன்றி’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.