முடி திருத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை : முதல்வர் தொடக்கி வைப்பு

கோயில்களில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 
மு.க.ஸ்டாலின்  (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)


கோயில்களில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 
அரிசி, பருப்பு, தேயிலைத்தூள் உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருள்களையும் அவர்களுக்கு முதல்வர் வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் 349 கோயில்களிலிருந்து 1,744 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com