சென்னைக்கு ஆண்டுதோறும் குடிநீர் தந்து உதவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 21.15 அடியாக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரி மிக பெரியது. அதாவது 9 கிலோ மீட்டர் சுற்றளவும், 24 அடி உயரமும் கொண்டது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
சென்னைக்கு ஆண்டுதோறும் குடிநீர் தந்து உதவும் 24 அடிகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, தொடர் கனமழை காரணமாக 21.15 அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து 715 கனஅடியாக இருக்கும் நிலையில், ஒரேநாளில் 50 மில்லியன் கனஅடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.