மகாளய அமாவாசை: காவிரி துலாக்கட்டத்தில் தர்ப்பணம் அளிக்க குவிந்த பொதுமக்கள்!
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை முதல் போலீஸாரின் தடையை மீறி பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்க திரண்டனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்க திரண்ட பொதுமக்களை போலீஸார் கலைத்து திருப்பி அனுப்பினர்.









