பிள்ளைப்பேறு நிச்சயம்: அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம்

மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அஸ்திர தேவர் மேளதாளம் முழங்கிட மூன்று குளங்களுக்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடந்தது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி ஒட்டி தீபாரதனை நடந்த போது எடுத்த படம்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி ஒட்டி தீபாரதனை நடந்த போது எடுத்த படம்.
Published on
Updated on
1 min read

மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அஸ்திர தேவர் மேளதாளம் முழங்கிட மூன்று குளங்களுக்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடந்தது.

மிகவும் பிரசித்தி பெற்ற பூம்புகார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில், சிவனின் முக்கண்கள் இருந்து தோன்றிய மூன்று பொறிகள் விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களை தாங்கிய மூன்று குளங்கள் உள்ளன. இந்த மூன்று குளங்களில் நீராடி ஸ்வேதாரண்யேஸ்வரர் வழிபட்டால் பிள்ளைப்பேறு நிச்சயம் என புராண வரலாறுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் மகாளய அமாவாசையை ஒட்டி புதன்கிழமை அஸ்திர தேவர் மேளதாளம் முழங்கிட மூன்று குளங்களுக்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. 

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com