நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மானாமதுரையில் நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் தொடங்கியுள்ள நவராத்திரி முதல் நாளான வியாழக்கிழமை இரவு உற்சவர் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

News image

முதல் நாள் நவராத்திரி விழாவின்போது ராஜராஜேஸ்வரி  அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்.

Updated On :8 அக்டோபர் 2021, 7:29 am

DIN

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் தொடங்கியுள்ள நவராத்திரி முதல் நாளான வியாழக்கிழமை இரவு உற்சவர் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

மானாமதுரையில்  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இதையொட்டி கோயில் முன் மண்டபத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. உற்சவர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

அதைத்தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், மகாதீபாராதனை நடந்தது. 

அதன்பின்னர் சோமநாதர் சன்னதியில் வடக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. முதல் நாள் விழாவில் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆனந்தவல்லி அம்மனையும் துர்க்கை அம்மனையும் தரிசனம் செய்தனர். 

Story image

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரம்.

மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக வினோத பெருமாள் கோயிலில் நடைபெற்ற முதல் நாள் நவராத்திரி விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தை வலம் வந்தார். 

முன்னதாக பெருமாளுக்கும் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொலு அலங்காரத்தை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.