மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
சென்னை பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள சங்கல்ப் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :9 அக்டோபர் 2021, 9:44 pm

DIN

சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக அவா் திறந்தாா்.

சங்கல்ப் எனும் பள்ளியானது கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 200 குழந்தைகள் பயின்று வருகிறாா்கள். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், தசைச் சிதைவு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்திடும் வகையில் சங்கல்ப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுப் பயிற்சி போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி மூலம் நகை, பரிசுப் பொருள்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், சோப்பு, மசாலா, முகக் கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சங்கல்ப் நிறுவன அறங்காவலா் முல்லாசரி அஜித் சங்கா்தாஸ், இயக்குநா் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமாா், சுலதா அஜித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.