இது குறித்து கார்த்திக் அளித்த விளக்கம் என்னவென்றால், நான் இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவில்லை. சுயேச்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டேன். எனது குடும்பத்தில் நான் மற்றும் 4 வாக்குகள் உள்ளன. ஆனால், அவை 4வது பஞ்சாயத்து வார்டில் உள்ளன. நான் போட்டியிட்டது 9வது வார்டில். எனக்கோ, என் குடும்பத்துக்கோ 9வது வார்டில் வாக்கு இல்லை. ஆனால், உண்மைக்கு மாறாக, நான் பாஜக சார்பில் போட்டியிட்டேன் என்றும், எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எனக்கு வாக்களிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.