விடுதலைச் சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநில எஸ்.டி., எஸ்.சி., ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை நமது அண்டை மாநிலங்கள் கொண்டாடுகின்றன. கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் நவம்பா் 1-ஆம் தேதியன்று அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறாா்கள். தமிழகத்திலும் அந்த அடிப்படையில் நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்க வேண்டும். இதுகுறித்தும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம் என்று திருமாவளவன் கூறினாா்.