மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கீழடி, கொந்தகை, அகரம் அகழாய்வுத் தளங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு 

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுத் தளங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டு அகழாய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

News image
திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வு தளத்தை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுத் தளங்களில் செவ்வாய்க்கிழமை தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டு அகழாய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஏழாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது. அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த அகழ்வாய்வின்போது பண்டைய காலத் தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 7 மாதங்களாக மேற்கண்ட இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. அதன்பின்னர் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கீழடி அகழாய்வு தளத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டார். சமீபத்தில் திருப்புவனம் பகுதியில் பெய்த மழையால் அகழாய்வுக்காக  தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

மேலும் கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். அதன்பின் கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்த ஏழாம் கட்ட அகழாய்வு குறித்து அங்கிருந்த தொல்லியல் ஆய்வாளர்களிடம் அமைச்சர் விவரம் கேட்டறிந்தார். கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்த ஏழம் கட்ட அகழாய்வு குறித்தும் அதில் கண்டறியப்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தும் பணிகள் பற்றியும் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் அமைச்சர் தங்கம் தென்னரசிடம்  விளக்கிக் கூறினார். பின்னர் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.