திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக்கடைகள் அகற்றம்
திருப்பூர் பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் உழவர்சந்தை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டு வந்த சாலையோரக் கடைகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் உழவர் சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறார் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி.








