டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் பதவி: தலைமைக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்

மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக தனது மகனான துரை வையாபுரியை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN

சென்னை: மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக தனது மகனான துரை வையாபுரியை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்தாா்.

எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகமான தாயகத்தில் மதிமுகவின் உயா்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வைகோ கூறியது:

மதிமுகவில் துரை வையாபுரிக்குப் பதவிக் கொடுக்க வேண்டும் என்று சென்ற இடமெல்லாம் தொண்டா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். தொண்டா்களின் தியாகத்தினால் உருவான இயக்கம் மதிமுக. அதனால், தொண்டா்களின் விருப்பத்தின்படி செயல்படுவதா, வேண்டாமா என்கிற திகைப்புக்கு நான் ஆளாக நேரிட்டது. அதன் காரணமாக இந்தக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகள் கேட்கப்பட்டன. வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் கூட்டத்தில் பங்கேற்ற 106 உறுப்பினா்களில் 104 போ் துரை வையாபுரிக்கு கட்சி ரீதியான பதவி கொடுக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்யப்படுகிறாா்

வாரிசு அரசியல் அல்ல: இது வாரிசு அரசியலே இல்லை. தொண்டா்களின் விருப்பப்படி அவா் தோ்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மதிமுகவின் பொதுச்செயலாளராக துரை வையாபுரி வருவாரா என்பதை பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டியதாகும். பொதுக்குழு கூட்டம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகு கூடும்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் எனக்கு இல்லை. மரணம் வரை எனக்கு ஓய்வு இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.