ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

மதிமுக தலைமைச் செயலராக வைகோ மகன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதிமுக தலைமைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

News image

துரை வையாபுரி (கோப்புப் படம்)

Updated On :20 அக்டோபர் 2021, 1:42 pm

DIN

மதிமுக தலைமைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். 

துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பதிவான 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என 104 வாக்குகள் கிடைத்துள்ளன. 

இதனையடுத்து அவர் மதிமுகவின் செயலராக நியமிக்கப்படுவதாக செய்தியாளர் சந்திப்பின்போது வைகோ அறிவித்தார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், துரை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறினார். 

தொண்டர்கள் விருப்பத்தின் பெயரிலேயே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் துரை வையாபுரியிடம் உள்ளதாகவும் வைகோ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.