புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருக்கல்யாணத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில்  கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா.

Updated On :22 அக்டோபர் 2021, 11:33 am

DIN


கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நவம்பர் 1 ஆம் தேதி நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5  மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 7 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர், திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில்,  முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வேந்திரன், கம்மவார் மகளிர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஆழ்வார் சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் , கோயில் நிர்வாக அதிகாரி நாகராஜன் , கோயில்  பணியாளர்கள், திரளான பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெறும். விழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் உலா நடைபெறும். 9 ஆம் திருநாளான இம்மாதம் 29 ஆம் தேதி தேர் திருவிழா அரசு உத்தரவின் படி நடைபெறும். 12 ஆம் திருநாளான நவம்பர் 1 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.