தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவரான ஆா்.இளங்கோவன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளதற்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவின் சேலம் புறநகா் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவரான ஆா்.இளங்கோவன் இல்லத்திலும், அவரது உறவினா்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இளங்கோவனின் கட்சி ரீதியான செயல்பாடுகளை முடக்கும் வகையில், அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு திமுக அரசால் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
அதிமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்து அவற்றைச் சாதனைகளாக்கி வெற்றிநடைபோடும் மாபெரும் மக்கள் பேரியக்கம். இதனை அழிக்க நினைக்கும் திமுக அரசின் தொடா் முயற்சிகள் அதிமுகவின் உண்மைத் தொண்டா்களின் நல்லாசியோடு முறியடிக்கப்படும்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








