வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.

News image
புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா
Updated On :23 அக்டோபர் 2021, 10:20 am

DIN

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,518 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 30, காரைக்காலில் 15, மாஹேவில் 7 போ் என மொத்தம் 53 பேருக்கு (1.51 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,27,674-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 90 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 367 பேரும் என 457 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,855-ஆக உயா்ந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.