இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

அக். 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.
இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்
இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

அக். 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.

மேஷம் 
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)


திறமைக்குத் தகுந்த வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடலாரோக்கியம் சற்று கவனிக்க வேண்டியிருக்கும். தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். இட மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் யாருக்கும் கடன் கொடுப்பதோ ஜாமீன் கையொப்பமிடுவதோ கூடாது. பண வரவு சீராக இருப்பினும் ஜாக்கிரதையாகக் கையாளவும். விவசாயிகள் சந்தையில் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மகசூல் லாபம் அதிகமாகும். 

அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். பெண்மணிகள் எவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிறைவேற்றுவார்கள். நீண்ட காலத் திட்டங்கள் தீட்ட இது உகந்த காலமாகும்.

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 22, 23. 
சந்திராஷ்டமம்: இல்லை.

•••

ரிஷபம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி, பின்பு சரியாகி விடும். தகுந்த நேரத்தில் மருத்துவ வசதிகளைப் பெறுவீர்கள் 

உத்தியோகஸ்தர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். எதிர்பார்த்த அரசுப் பணிகள் நிறைவேறும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.  

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு, வழக்கில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் ஏற்படும். பிறரிடம் சுமூகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும்.

பெண்மணிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். உடல் நலனில் மிகுந்த அக்கறை தேவை. அலங்காரப் பொருள்களின் சேர்க்கை நிகழும். மாணவமணிகளின் திறமை பளிச்சிடும். சக மாணவர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன் தரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 22, 24. 
சந்திராஷ்டமம்: இல்லை.

••••
மிதுனம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

விவேகத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடி வரும். வேலையில்லாதவர்களுக்கு, நல்லதொரு வாய்ப்பு கிட்டும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பாடுபடுவீர்கள். முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகளின் தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். புதிய சொத்துக்கள் சேரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். 
அரசியல்வாதிகள் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு செலுத்தி வளர்ச்சி காண்பார்கள். எவரிடமும் எந்த ரகசியத்தையும் பகிராதீர்கள்.

கலைத்துறையினருக்கு கை நழுவிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் தேடி வரும். கடுமையாக உழைத்து பலன் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சற்று நிம்மதியைக் காண்பீர்கள். சிறிது பொருளாதார ஏற்றம் உண்டாகும். மாணவமணிகள் கல்வி உயர்வுக்காக செய்யும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் பக்க பலமாகவே இருக்கும்.

பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 23, 24. 
சந்திராஷ்டமம்: இல்லை.

•••
கடகம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

நெடு நாளாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். உங்கள் காரியங்கள் திட்டமிட்டப்படி நடக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகப் பிரச்னைகள் படிப்படியாக குறையும். வியாபாரிகளுக்கு பிரயாணங்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். உடல் உழைப்புக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி மேலிடத்தின் பரிந்துரையின் படி கிடைக்கும். அனைவராலும் பாராட்டப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சில சிரமங்கள் ஏற்படும். சக கலைஞர்களுடன் சிறிது விரோதம் ஏற்படும். அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பெண்மணிகளுக்கு சொந்த பந்தங்களுடனான அன்பு பரஸ்பரம் நீடிக்கும். குழந்தைகளின் வருகையினால் சற்று மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகள் வெளிநாடு சென்று படிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் நல்ல பலன் தரும். 

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 22, 25. 
சந்திராஷ்டமம்: இல்லை. 

•••
சிம்மம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

தெய்வப் பணிகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். வெற்றிகள் குவியும். குழந்தைகளினால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடலாகாது. உற்றார் உறவினர்களால் சில தொல்லைகள் சூழும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். அனைத்து வேலைகளும் திருப்திகரமாக முடியும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகளின் கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். தானிய உற்பத்தி லாபகரமாக இருக்கும். 
அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மேலிடத்தின் கட்டளைக்கிணங்க, கடினமான காரியங்களையும் கவனத்துடன் முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பழைய பாக்கிகளும் உங்களைத் தேடி வரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை நிகழும். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சக மாணவர்களுடன் ஆரோக்கியமான அறிவு சார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வீர்கள். 

பரிகாரம்: பார்வதிதேவியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 23, 26. 
சந்திராஷ்டமம்: இல்லை.

•••
கன்னி
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெற்றோராலும், சகோதர, சகோதரிகளாலும் நன்மைகள் உண்டாகும். அசையும் சொத்துகளினால் ஆதாயம் ஏற்படாது. 
குழந்தைகளின் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள். கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். விவசாயிகளுக்கு கால்நடைகளினால் நல்ல பலன் ஏற்படும். விளைச்சல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினர் பயணங்களைத் தகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து பண வரவைப் பெருக்குவீர்கள். பெண்மணிகள் கணவரோடு ஒற்றுமையோடு பேசிப் பழகி அவருக்குச் சேவை செய்வீர்கள். இருப்பினும் மனதில் காரணமில்லாமல் சில குழப்பம் நிலவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியில் அதிக அக்கறை காட்டவும். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 25, 26. 
சந்திராஷ்டமம்: 22.

••••

துலாம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பெரியோர்களின் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். செய்தொழிலில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இல்லத்தில் நிம்மதி நிறையும். பெற்றோரின் உடல் நலம் சிறப்படையும். அவர்களுக்கான மருத்துவச் செலவு குறையும்.  

உத்தியோகஸ்தர்கள் மனதை அரித்து வந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளோடு சற்று ஒதுங்கியே இருங்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்படவும். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும். வயல் வரப்பு பிரச்னைகளில் நல்ல முடிவை காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் பிறரிடம் பேசும் நேரத்தில் எச்சரிக்கை தேவை. சமூகத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் வீண் பிரச்னை, வம்புகளைத் தவிர்த்தல் நலம். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 22, 27. 
சந்திராஷ்டமம்: 23, 24, 25.

••••
 

விருச்சிகம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நல்லவர்களோடு இணைந்து நல்ல நட்பை உருவாக்குவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். கடினமாக உழைத்து உங்கள் காரியங்களைச் சாதிப்பீர்கள். பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருக்கவும். பிறரிடம் உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது கவனம் தேவை. வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகளைத் தேடி மிகுதியான பொறுப்புகள் வந்து சேரும். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உள்ளத்தில் புதிய நம்பிக்கை பளிச்சிடும். பெண்மணிகளுக்கு உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் சீரான வருமானத்தைக் காண்பீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைப்பீர்கள். அதிகாலை படிப்பு மனதில் பதியும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 24, 25. 
சந்திராஷ்டமம்: 26, 27.

••••

தனுசு
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் சற்று முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். பழைய கடன் தொல்லைகள் குறைந்து நிம்மதி அடை
வீர்கள். எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் இட்ட வேலைகளைத் திறம்பட முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் சற்று மெளனம் காக்கவும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளை அறவே தவிர்க்கவும். விவசாயிகள் கையிருப்பு பொருள்களைப் பாதுகாக்கவும். கால்நடைகளால் செலவு உண்டானாலும் லாபம் ஏற்படும். 

அரசியல்வாதிகள் எவரிடமும் ரகசியங்களைப் பகிராதீர்கள். இதனால் உட்கட்சி பூசல் அதிகரிக்கும். கலைத்துறையினர் கடின முயற்சியால் உன்னத நிலையை அடைவீர்கள். உங்கள் செயல்பாடுகளைப் பிறர் பாராட்டுவார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குதூகலம் நிறையும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வெளி விளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 24, 27. 
சந்திராஷ்டமம்: 28

••••

மகரம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் எதிர்பார்த்த ஏற்றம் உண்டாகும். குடும்ப வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ரகசியங்களைக் காப்பதில் உறுதியாக இருங்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். வேலைப்பளு அதிகம் இருந்தாலும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் திருப்திகரமாக அமையும். கூலியாட்களை பொறுமையுடன் வழி நடத்துவீர்கள். 

அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் கட்டுப்பாட்டை இழந்து பேசாதீர்கள். மேலிடத்திடம் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டும் பணமும் வந்து சேரும். பெண்மணிகள் மனதில் காரணமில்லாத குழப்பங்கள் நிலவும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். உங்கள் முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவளிப்பார்கள்.

பரிகாரம்: சப்த கன்னிகைகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 25, 28. 
சந்திராஷ்டமம்: இல்லை.

••••

கும்பம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்களது பொருளாதார பிரச்னை ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியம் சற்று கவனிக்கப்பட வேண்டிவரும். மனதில் குழப்பங்களும், சஞ்சலங்களும் தோன்றி மறையும். வீட்டிலும், வெளியிலும் பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையில் இட மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும். காலதாமதம் ஏற்பட்டாலும் வரவேண்டிய பணம் வந்துசேரும். விவசாயிகளுக்கு உற்பத்தி பொருள்களால் லாபம் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் நன்மை அடைவீர்கள். 
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகளின் வம்பு வழக்குகளில் சிக்காமல் மௌனம் காக்கவும். புதிய பதவிகள் வர சற்றுத் தாமதமாகும். கலைத்துறையினர் மனதிலிருந்த அவநம்பிக்கை அகலும். புது வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் தோன்றலாம். எதையும் குதர்க்கமாக எடுத்துக்கொள்ளாமல் பரந்த மனப்பான்மையுடன் சிந்தியுங்கள். மாணவமணிகள் படிப்பில் சற்று மந்த நிலைமை காணப்படும். சோம்பேறித்தனத்தை விரட்டி சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.

பரிகாரம்: ராகு பகவானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 27, 28. 
சந்திராஷ்டமம்: இல்லை.

••••

மீனம்
22.10.2021 முதல் 28.10.2021 வரை
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் நல்ல முறையில் பூர்த்தியாகும். வருமானம் படிப்படியாக உயரும். புதிய நண்பர்கள் கிடைத்தாலும் சற்று கவனமாகப் பழகவும். ஆன்மிக, தர்ம சிந்தனைகள் மேலோங்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் கவனக்குறைவால் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முயற்சிக்கவும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்வீர்கள். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து மன அமைதியைப் பெறுவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் முழு கவனம் தேவை. ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்: திருவேங்கடநாதனை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 24, 28. 
சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com