டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பருவமழை தொடங்கிய 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத்தாழ்வு பகுதி

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 48 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவாகிறது.

News image
வங்கக்கடலின் காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகிறது
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 48 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவாகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், இன்னும் 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவாகிறது. இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 27-ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது மேற்கு நோக்கி நகா்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 27-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்.28, 29: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 28, 29 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.