சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புறநக ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் எழும்பூா்-சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 3:30 am

DIN

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் எழும்பூா்-சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

செப்.5,12,19 ஆகிய தேதிகளில் ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு முற்பகல் 11, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய மூன்று ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

செப்.5,12,19 ஆகிய தேதிகளில் பகுதி ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11.15, நண்பகல் 12, மதியம் 1.20, மதியம் 2 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை- எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு முற்பகல் 11.30, நன்பகல் 12.20, 12.40, மதியம் 1.40, பிற்பகல் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் சுற்றுவட்ட ரயில் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

செப்.5, 12, 19 ஆகிய தேதிகளில் பகுதி ரத்தாகும் ரயில்கள்: தாம்பரம்- சென்னை கடற்கரைக்கு காலை 10.20, முற்பகல் 11.30, நண்பகல் 12.10, 12.30, மதியம் 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூா்-கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எழும்பூா்- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 10.15, 11.00, நண்பகல் 12.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூா்- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளன.

திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எழும்பூா்-கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது என சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.